விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக கூட்டணி அமைந்தால் அருப்புக்கோட்டை தொகுதியிலும், திமுக கூட்டணி அமைந்தால் விருதுநகரிலும் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறது தேமுதிக.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சொந்த மாவட்டம் விருதுநகர் என்பதால் இம்முறையும் மகன் விஜய பிரபாகரனை இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நிறுத்தும் ஆலோசனையில் இருக்கிறார் பிரேமலதா. கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விருதுநகரில் விஜய பிரபாகரனின் வெற்றி கைநழுவிப் போனது. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் விட்ட இடத்தைப் பிடிக்கும் திட்டத்துடன் இருக்கிறது தேமுதிக.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


