Anbumani, who received the ‘mango fruit’ symbol in the Bihar election, Ramadas appeals to the Election Commission.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கியமாக, இருதரப்பினரும் பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் ஆணையத்தை அணுகினர். தேர்தல் ஆணையமோ, அன்புமணி தலைமையிலான பாமக நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, கட்சியின் தலைவருக்கான காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்தது. மேலும், தேர்தலின் போது ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னமும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது.

குறிப்பாக, தேர்தல் ஆணையம் வழங்கிய கடிதத்தில், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு மட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கும் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The secret behind the continuous victories of ‘Thangamani’! – Will DMK win by a large margin in Kumarapalayam this time?

Saurashtra Progressive Party demands one seat in 5 constituencies.