கும்பகோணம் தொகுதியில் அதிமுகவும் அதன் கூட்டணியும் எப்படி தொடர்ச்சியாக ஆறுமுறை தோற்று அசந்து போனதோ அதேபோல் குமாரபாளையம் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை திமுக தோற்றுவிட்டு நிற்கிறது. இதற்கும் காரணம், உள்ளடி வேலைகள் தான். இம்முறையும் அப்படி ஏதாவது நடந்து அசிங்கப்பட்டு நின்றுவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையில் இருக்கும் திமுக, வாய்ப்பு அமைந்தால் குமாரபாளையத்தை கொமதேகவுக்கு தந்துவிடும் யோசனையிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
குமாரபாளையத்தை தொடர்ச்சியாக திமுக கோட்டை விட்டதற்கு உள்ளடி மட்டுமல்லாது அதிமுக வேட்பாளராக களமிறங்கி வரும் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஒரு காரணம். கடந்த 2006-ல் திருச்செங்கோடு தொகுதியில் தங்கமணி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் மத்திய இணையமைச்சரும் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட செயலாளருமான செ.காந்திச்செல்வனை நிறுத்தியது திமுக. இருவருக்குமான போட்டி இழுபறியாக இருந்த நிலையில், காந்திச்செல்வன் 116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
Click the link above to read the full article on the original website.


