சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இத்தனை நாட்கள் இருந்தோம். நம் சொந்தங்களின் நலன் கருதி மவுனம் காத்தோம். அமைதியாக இருந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலை பின்னப்பட்டு, அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. இவற்றை சட்டம், சத்தியத்தின் துணையுடன் துடைத்தெறியப் போகிறோம்.
Click the link above to read the full article on the original website.


