சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ.6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தலைமைச் செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதிதவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐவிசாரணை நடந்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலானகுழு கண்காணிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, தற்போதுசிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
Click the link above to read the full article on the original website.


