சென்னை: “வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.” என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் வரும் 4ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று (நவம்பர் 2) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை நடிகர் விஜய்யின் தவெக புறக்கணித்துள்ளது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.


