சென்னை: விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று வடிகட்டிய பொய்யை சொல்லி மத்திய அரசு மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? இந்தத் திட்டத்தை பாரத பிரதமர் மோடி ஏன் கொண்டு வந்தார்? எதற்காக 100 கிலோவிற்கு, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியினை கலக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏன் விதிமுறைகள் வகுத்துள்ளது? என்பதை தனது வாயால், பத்திரிகையாளர்களுக்கும் தமிழக மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். இதுகுறித்து போதிய அறிவு இல்லை என்றால் , மத்திய அரசின் திட்டத்தை படித்து புரிந்து தெளிவு பெற வேண்டும்.
Click the link above to read the full article on the original website.


