சென்னை: கோயில் நிதியில் இருந்து வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டதடை விதிக்கக் கோரி, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ‘‘கோயில் நிதியைப் பயன்படுத்தி, வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி பல கோயில் இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன’’ என்றார்.
Click the link above to read the full article on the original website.


