English
காவியக் காதல் திரைப்படங்களின் வரிசையில் மறக்க முடியாத படம் ‘அம்பிகாபதி’. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகனுக்கும் மன்னனின் மகள் அமராவதிக்குமான காதலைச் சொல்லும் படம். இந்தத் திரைப்படத்தில் 20-க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். ஆனாலும் டி.எம்.சௌந்தரராஜனும் பானுமதியும் பாடும் ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே கண்ணே…’ பாடல் ஒரு காவியத் தன்மையோடு ஒலிக்கும். இசை மேதை ஜி.ராமனாதன் இந்தப் பாடலில் ராகமாலிகை தாளமாலிகையைப் பயன்படுத்தி இசையமைத்திருப்பார். இந்தப் படத்தைப் பற்றியோ பாடியவர்களைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத இந்தத் தலைமுறைக்கு இந்தப் பாட்டின் பெருமைகளை எடுத்துக்கூறி,
அவர்களைப் பாடவைத்து வெளியிட்டிருக்கிறார் சுபஸ்ரீ தணிகாசலம். கிருதி பட், அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த ஹூஸ்டன் நகரிலிருந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ராகவ் கிருஷ்ணா பிரான்ஸின் பாரீஸ் நகரத்திலிருந்து பாடியிருக்கிறார்.
Tamil
பாடல் பழசு; பாடுவோர் புதுசு!
காவியக் காதல் திரைப்படங்களின் வரிசையில் மறக்க முடியாத படம் ‘அம்பிகாபதி’. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகனுக்கும் மன்னனின் மகள் அமராவதிக்குமான காதலைச் சொல்லும் படம். இந்தத் திரைப்படத்தில் 20-க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். ஆனாலும் டி.எம்.சௌந்தரராஜனும் பானுமதியும் பாடும் ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே கண்ணே…’ பாடல் ஒரு காவியத் தன்மையோடு ஒலிக்கும்.
இசை மேதை ஜி.ராமனாதன் இந்தப் பாடலில் ராகமாலிகை தாளமாலிகையைப் பயன்படுத்தி இசையமைத்திருப்பார். இந்தப் படத்தைப் பற்றியோ பாடியவர்களைப் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லாத இந்தத் தலைமுறைக்கு இந்தப் பாட்டின் பெருமைகளை எடுத்துக்கூறி, அவர்களைப் பாடவைத்து வெளியிட்டிருக்கிறார் சுபஸ்ரீ தணிகாசலம். கிருதி பட், அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த ஹூஸ்டன் நகரிலிருந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ராகவ் கிருஷ்ணா பிரான்ஸின் பாரீஸ் நகரத்திலிருந்து பாடியிருக்கிறார்.
Click the link above to read the full article on the original website.