திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கற்கருவிகளை கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: நெல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், கிரீஸ்வரன் ஆகியோர் அளித்த தகவலின்படி, அங்கு ஆசிரியராகப் பணியாற்றும் கோவிந்தராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரது நிலங்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிய கற்கருவிகளை கண்டெடுத்துள்ளோம். இவை புதிய கற்கால மனிதர்களின் தேவைகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் வெளிப்படுத்துகின்றன.
Click the link above to read the full article on the original website.


