சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீகாந்தி பரசுராமன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூ.த.அருள்மொழி, இளைஞர் சங்க மாநிலத் தலைவர் ஜிகேஎம். தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Click the link above to read the full article on the original website.


