கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் இன்று (அக்.27) கட்சித் தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் தவெகவினர் நேற்று அழைத்துச் சென்றனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கடந்த 3, 4-ம் தேதிகளில் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையில், உயிரிழந்தோர் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகை கடந்த 18-ம் தேதி வரவு வைக்கப்பட்டது.
Click the link above to read the full article on the original website.


