Frequent unannounced power cuts in the Rameswaram areas!

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதியுற்று வரும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமேசுவரம் தீவுப் பகுதி முழுவதும் சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் பிரச்சனையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான தெருப் பகுதிகளில் மாலை முதல் அதிகாலை வரை தொடர் குறைந்த ‌மின் அழுத்த பிரச்சனை பல மாதங்களாக இருந்து வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

On October 27, a new low-pressure area is intensifying into a cyclone: heavy rainfall expected in Tamil Nadu until October 28.

The High Court orders the submission of a list of those who have encroached on water bodies in the Western Ghats.