பொதுவாக, சிட்டிங் தொகுதிகளை விட்டுக் கொடுக்க எந்தக் கட்சிக்குமே அத்தனை எளிதில் மனது வராது. யதார்த்தம் இப்படி இருக்க, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள் மீது தற்போது திமுக கரிசனப் பார்வை பார்ப்பது திமுக கூட்டணிக் கட்சிகளை திகிலடைய வைத்திருக்கிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகள் காங்கிரஸுக்கும், சாத்தூர் தொகுதி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரை தவிர்த்து மற்ற 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த முறை 7 தொகுதிகளையுமே திமுக கூட்டணியே கைப்பற்ற வேண்டும் என மாவட்டத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
Click the link above to read the full article on the original website.


