கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்கா நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அல்-கய்தா மற்றும் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன. இதனால் அங்கு வன்முறை நிலவுகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட எரிபொருள் வாகனங்களுக்கு தீவிரவாதிகள் சமீபத்தில் தீ வைத்தனர். கச்சா எண்ணெய் விநியோகத்துக்கும் தடை ஏற்பட்டதால் மாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மின்சார உபயோகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Click the link above to read the full article on the original website.


