2,000 cubic feet of water released from Poondi Lake!

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட் டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத் தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத் தின் 35 அடி மொத்த உயரத் தில் 33.75 அடி உயரத்துக்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடி 2,745 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 2,600 கனஅடி மழைநீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 47 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீர்த்தேக் கத்தில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Sir | Those who have changed their address and are living elsewhere need not worry: Election Commission officials explain

PM Modi extends birthday wishes to Advani