புதுடெல்லி: பிஹாரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில் இந்த மாநிலத்தில் காட்டாட்சிக்கு காரணமானவரின் (லாலு பிரசாத்) படங்களை ஏன் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி மறைமுகமாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கதிஹாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசியதாவது: பிஹாரில் ஒட்டப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவரொட்டிகளில், பிஹாரில் கட்டாட்சியை கொண்டு வந்த நபரின் படங்கள்(லாலு பிரசாத்) முற்றிலுமாக காணவில்லை. ஒரு சில இடங்களில் தொலைநோக்கியில் கூட காணமுடியாத அளவுக்கு மிகச் சிறியதாக உள்ளன.
Click the link above to read the full article on the original website.


