அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விருப்பத்துக்கு மாறாக சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களையும் பிரிந்து சென்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பதாகச் சொல்லும் சசிகலாவும் தினகரனுமே ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்துவது போல், அண்மையில் பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தினகரன் ஏனோ அதை தவிர்த்தார். இத்தனைக்கும், ஓபிஎஸ்ஸும் செங்கோட்டையனும் சசிகலா வருகைக்காக காத்திருந்து அவரைச் சந்தித்தார்கள். இதுவும் அரசியல் வட்டாரத்தில் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
Click the link above to read the full article on the original website.


