பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிஹாரில் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என சிராக் பாஸ்வான் கூறினார்.
Click the link above to read the full article on the original website.


