விஜய்யின் 2-ம் கட்ட பிரச்சாரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தவெக-வில் மக்கள் பாதுகாப்பு படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பிரிவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் பனையூரில் நேற்று நடந்தது.
கரூர் நெரிசல் சம்பவத்துக்கு பிறகு, தவெக தலைவர் விஜய் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோட் ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக, கட்சியின் ஒவ்வொரு அணி பிரிவு நிர்வாகிகளுக்கும் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விஜய் கூட்டத்துக்கு வரும் மக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில், ‘மக்கள் பாதுகாப்பு படை’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


