இப்போது இருப்பது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல… இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சோளிங்கரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் அந்தக் கட்சிக்காக வகுத்த விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டார். விதிகளை திருத்தி தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். ஆனால், எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகள் என்னுடன் தான் இருக்கிறார்கள். கட்சியிலிருந்து களைகளை நீக்கிவிட்டதாக பழனிசாமி சொல்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நச்சுச் செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது இருப்பது உண்மையான அதிமுக அல்ல. இது பழனிசாமி உருவாக்கிய அதிமுக. வரும் தேர்தலில் அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாது வெற்றிக் கூட்டணியாகவும் அமையும்.
Click the link above to read the full article on the original website.


