ஏற்கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவுக்குள் மீண்டும் அரவணைக்க வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட இபிஎஸ், செங்கோட்டையன் மீது கைவைத்தால் என்னாகுமோ என்றெல்லாம் யோசிக்காமல் துணிச்சலுடன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கி தனது ஒற்றைத் தலைமையின் வலிமையை மற்றவர்களுக்குப் புரியவைத்திருக்கிறார்.
“களைகளை எடுத்தால் தான் பயிர் செழிக்கும். கட்சியில் உள்ள களைகள் அகற்றப்பட்டதால் இனி கட்சி செழித்து வளரும்; ஆட்சியிலும் அமரும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கும் இபிஎஸ், கட்சியைவிட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ், தினகரனை விட கட்சிக்குள் இருந்து கொண்டே தனக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையனைப் பற்றி தான் சற்றே கவலை கொண்டார். இப்போது அவரையும் கழற்றிவிட்டதன் மூலம், தனக்கிருந்த இன்னொரு தொல்லையும் நீங்கிவிட்டதாக அவர் நிம்மதி கொண்டிருக்கிறார்.
Click the link above to read the full article on the original website.


