சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் பெயர் இடம்பெறும் வகையிலும், இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்களை நீக்கும் வகையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.
அதன்படி பிஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அக்.28-ல் முதல் கட்டப் பணிகள் தொடங்கின. அதன்படி பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, அரசியல் கட்சிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டன.
Click the link above to read the full article on the original website.


