புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், சீனாவுடனான பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு தவறியதும், எஸ்ஐஆர் உள்ளிட்டவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக முக்கிய கவலைகளாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ், “எஸ்ஐஆர் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் போது இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக தொடர்ந்து கூறிவரும் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஒரு முக்கிய பிரச்சினை. சீனாவுடனான தற்போதைய உறவு குறித்து ஒரு தெளிவில்லை. சீனாவுடன் எல்லை ஒப்பந்தம் எதுவும் இல்லை, நாம் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. சீனா நிறுவியுள்ள புதிய இயல்புநிலையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, இதுவும் முக்கிய பிரச்சினையாக இருக்கும்.
Click the link above to read the full article on the original website.


