சென்னை: "தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. இதில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார். மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவில், ஆளுநரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதி சட்ட முன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால் இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியை ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால் இந்த சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, பல கட்டங்களாக பரிசீலிக்கப்பட்டு இந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
Click the link above to read the full article on the original website.


