சென்னை: 2020- 21 ஆட்சிக்காலத்தின் முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் தாங்கள் கட்டிக்கொண்டிருப்பதாகவும், மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினாலே தமிழகத்தின் கடன் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு குறையும் என்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம்தென்னரசு, “2020- 21 ஆட்சிக்காலத்தின் முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் தொடக்கத்தில் தமிழகத்தின் கடன் 1 லட்சத்து ஆயிரத்து 349 கோடி ரூபாயாக இருந்தது, அந்த ஆட்சி முடியும் போது 2015-16ல் தமிழகத்தின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 66 கோடி ரூபாயாக உயர்ந்தது, அதாவது கடன் 108 சதவீதம் உயர்ந்தது.
Click the link above to read the full article on the original website.


