திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கட்சியின் 7 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக அப்கிரேடு ஆகியிருக்கிறார். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்பு துணைப் பொதுச்செயலாளராக இருந்தார். அதைத்தான் சாமிநாதன் மூலம் நேர் செய்திருக்கிறது திமுக தலைமை என்று சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் வேறு சில விவகாரங்களும் இருக்கின்றன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் திமுக நிர்வாகிகள் சிலர், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான், காங்கயம், தாராபுரம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக மு.பெ.சாமிநாதனும் அவரது தீவிர ஆதரவாளரான இல.பத்மநாபன் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தொகுதிகள் அடங்கிய திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
Click the link above to read the full article on the original website.


