பெங்களூரு: கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்ற‌னர்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.


