ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் போகிற போக்கில் தட்டிவிட்ட செய்தியானது பல கட்சிகளையும் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கேகூட ‘அதிகாரப் பங்கு’ என்ற பதம் இனிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸார் சிலர் அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை தைரியமாக முன்னெடுத்து வருகிறார்கள். இதே சிந்தனையில் இருக்கும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தவெகவை நோக்கி நகரும் போக்கில் தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த மே மாதமே தொடங்கிவிட்ட கிருஷ்ணசாமி, “ஓட்டப்பிடாரத்தில் இருந்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒரு எம்எல்ஏ வெற்றிபெற்ற பிறகுதான், விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்க முடிந்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர், 25 முதல் 30 சதவீதம் உள்ளோம்.
Click the link above to read the full article on the original website.


