ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெண்கள் தங்கியிருந்த விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய ஒடிசா மாநில பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலத்தில் டாடா தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக லாளிக்கல் எனும் பகுதியில் டாடா தொழிற்சாலை சார்பில் விடியல் ரெசிடென்சி விடுதி கடப்பட்டுள்ளது. இங்கு 8 பிளாக்கில் 11 அடுக்குகள் அமைந்துள்ளது. இங்கு 6,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், பெண்கள் தங்கி இருந்த குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று இரவு விடுதியில் தங்கியிருந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Click the link above to read the full article on the original website.


