சென்னை: “எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திமுகவுக்குத் தெரியும். அதிமுகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததால் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள்” என திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரை அடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிலிருந்தே கூறி வருகிறார். இதன் விளைவாக பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
Click the link above to read the full article on the original website.


