சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
சிட்னியில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேவியர் பார்ட்லெட் நீக்கப்பட்டு நேதன் எலிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Click the link above to read the full article on the original website.


