மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை ஆகிய பகுதிகளில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவிரி ஆற்றின் உபரி நீரை மேட்டூர் அணையின் வலது கரை நீர் தேக்கப்பகுதியிலிருந்து, கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள வறண்ட குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர் உந்துதல் மூலம் குழாய் வழியாக நீரேற்றம் செய்யும் திட்டம் குறித்து முதல்கட்ட ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 24 கிராமங்களில் உள்ள 31 நீர்நிலைகளுக்கு நீர் வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


