மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணிவிழா நவ. 10-ம் தேதி நடைபெற உள்ளது. மணிவிழா மாநாட்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. 2-வது நாளான நேற்று ‘சரபபுராணம்- மூலமும் உரைநடைச் சுருக்கமும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து, நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி மணி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகா சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மணி விழா மலரைப் பெற்றுக்கொண்டார்.
Click the link above to read the full article on the original website.


