சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக லாம் என்பதால், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் துறை கூறியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆருக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். அதற்காக தயார் நிலையில் உள்ளோம். அறிவிக்கப்பட்டதும் முதல்கட்டமாக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி நிலையில் அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடத்தப்படும். வழக்கமான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களும் கிடையாது.
Click the link above to read the full article on the original website.


