லக்னோ: பிரம்மேஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் உத்தர பிரதேசம் லக்னோவில் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை யூனிட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எனது சொந்த தொகுதியான லக்னோவில் 5 மாதங்களுக்கு முன்புதான் பிரம்மோஸ் ஏவுகணை ஆலை தொடங்கப்பட்டது. தற்போது முதல் யூனிட் வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை வளர்ச்சியில் இது முக்கியமான நடவடிக்கை. பிரம்மோஸ் ஏவுகணை வெறும் ஆயுதம் மட்டும் அல்ல. இது உள்நாட்டு திறனின் அடையாளம். தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் முதுகெலும்பாக பிரம்மோஸ் ஏவுகணை விளங்குகிறது.
Click the link above to read the full article on the original website.


