சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக். 16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
வரும் 20-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஜவுளி, பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய 2 நாட்களும் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் நாளை (அக்.17) சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், அரசு சார்பில் இன்று முதலே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 760 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 565 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.

