ராய்ப்பூர்: கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் 3 நாட்களாக உடலை அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டம், கோடிகுர்ஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்நலம் பாதிக்கப்பட்ட மனிஷ், ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மனிஷ் உடலை கிராமத்துக்கு கொண்டு வந்து, தங்கள் சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர் என்பதால், அவரது உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.


