புதுடெல்லி: பிஹாரில் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக பெண் தொண்டர்களுக்கு பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. முன்னதாக, பிஹார் பாஜக பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த தேர்தலில் நான் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும் பாஜக தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு பொதுக் கூட்டமும் முந்தைய சாதனையை முறியடிக்கின்றன. நமது சகோதரிகளும் மகள்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள். பிஹாரின் பாஜக பெண் தொண்டர்கள் 'எனது வாக்குச்சவடி மிகவும் வலிமையானது’ என்ற உறுதியுடன் செயல்படுகிறார்கள்.
Click the link above to read the full article on the original website.


