சிட்னியில் இன்று நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்து ஆடிவருகிறது. டாஸைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அதிர்ஷ்டமில்லை. இந்தப் போட்டியையும் சேர்த்து தொடர்ச்சியாக 18 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி டாஸில் தோற்றுள்ளது.
டாஸில் தோல்விகள் அடைந்திருந்தாலும் சிட்னியை விட்டுப் பார்த்தால் 17 போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது.
ஆகஸ்ட் 2024- 2ம் தேதி கொழும்புவில் இலங்கைக்கு எதிராக ஆடிய அந்தப் போட்டிதான் டை ஆனது. அந்த ஒருநாள்போட்டியில் ரோஹித் சர்மா கேப்டன் அந்த ஒருநாள் போட்டி இரு அணிகளும் 230 ரன்கள் எடுக்க ‘டை’ ஆனது.
Click the link above to read the full article on the original website.


