புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், "ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எங்கள் முடிவுகள் இருப்பது வழக்கம். எரிசக்தி குறித்த கேள்விக்கான எங்கள் பதில் மற்றும் நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதாகும். எங்கள் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ப அவற்றை மலிவு விலையில் பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
Click the link above to read the full article on the original website.


