தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் அக்.22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (20-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், அக்.16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று (18-ம் தேதி) சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இன்று (19-ம் தேதி) 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
Click the link above to read the full article on the original website.


