ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆண்டுதோறும் புஷ்கர் ஒட்டக கண்காட்சி நடைபெறும். இங்கு பல்வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான குதிரை இடம்பெற்றுள்ளது. சண்டிகரை சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான இந்த இரண்டரை வயது குதிரைதான் கண்காட்சியில் இடம் பெற்று மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து குதிரையின் உரிமையாளர் கேரி கில் கூறியதாவது: மார்வாரி இனத்தைச் சேர்ந்த இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்துள்ளோம். பல்வேறு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடுகின்றனர். இதுவரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்டுச் சென்றுள்ளனர். இந்த குதிரை மூலம் இனப்பெருக்கம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் பெறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Click the link above to read the full article on the original website.


