சென்னை: தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ‘தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர்: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!’ என்று தலைப்பிட்டு அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.


