தஞ்சாவூர்: ஆய்வுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியிடம், வயலில் சாய்ந்து முளைவிட்ட நெற்கதிர்களைத்தான் காண்பித்தேன் என்று தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் விவசாயி விளக்கம் அளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி முளைவிட்டுள்ள நெல்மணிகளையும் பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த 22-ல் தஞ்சாவூருக்கு வந்தார்.
காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அவர் ஆய்வு செய்தபோது, வரவுக்கோட்டையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் விவசாயி, தனது வயலில் அழுகிய நெற்கதிர்களையும், அதில் முளைத்த நெல்மணிகளையும் பழனிசாமியிடம் காண்பித்து, தனது வேதனையைத் தெரிவித்தார்.
Click the link above to read the full article on the original website.


