சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன இன்ஜின் உற்பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான லைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.


