முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதற்கு தோல்வி பயமே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்ஐஆர்) குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முறையான தேர்தல் நடத்தும் கோட்பாடுகளை கொடுக்கும் தேர்தல் ஆணையத்தை திமுக எதிர்ப்பதன் பின்னணி என்ன? தோல்வி பயமே கார
ணம். பிஹார் தேர்தலில் தேஜகூ ஆட்சி மீண்டும் மலர்ந்து நல்லாட்சி தொடர பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.


