வணக்கம், என் பெயர் ஷாலினி. நான் மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு அம்மா, அப்பா இருவரும் இல்லை – இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இல்லை. அம்மா புற்றுநோயால், அப்பா பக்கவாதத்தால் உயிரிழந்தார்கள். அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தபோதும், நான் என் கல்வியை நிறுத்தவில்லை.
எங்கள் கல்லூரியில் “Digital Construction” எனும் திறன் பயிற்சியை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்றது எனக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. பெற்றோர்கள் இல்லாமல் வாழும் எனக்கு இந்த பயிற்சி ஒரு நம்பிக்கையாக மாறியது. இந்த திட்டம் எனக்கு தொழில் உலகில் நுழைய தேவையான திறன்களை வழங்கியது. இன்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடிகிறது – கல்லூரி முடித்தவுடன் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது.
Click the link above to read the full article on the original website.

