பாட்னா: பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நவ. 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிஹாரில் பெண்கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு சார்பில் அண்மையில் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கு போட்டியாக ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் புதிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.


