சேலம்: பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’ ஆகிவிட்டது. அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும், என அன்புமணி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில் வசிஷ்ட நதியை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் உபரி நீரை சரபங்கா நதியுடன் இணைத்து வசிஷ்ட நதிக்கு கொண்டு வருவதன் மூலம் இப்பகுதியில் விவசாயம் செழிக்கும், குடிநீர் பஞ்சம் தீரும். வசிஷ்ட நதி மாசுபட்டுள்ளதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Click the link above to read the full article on the original website.


